நாங்கள் யார்?
கர்த்தருடைய வருகைக்கான வழியை ஆயத்தப்படுத்துதல்
சாது சுந்தர் செல்வராஜ் அவர்கள் இயேசு ஊழியங்களின் நிறுவனர் ஆவார். இது ஒரு தீர்க்கதரிசன-சுவிசேஷப் பணியாகும். கிறிஸ்து இயேசுவை அதிகம் அறியாத சமூகத்திற்கு சுவிசேஷத்தை அறிவிப்பதற்கான கர்த்தரின் அழைப்பை சாது ஐயா அவர்கள் இவ்வூழியத்தின் மூலம் நிறைவேற்றி வருகிறார். சாது ஐயாவின் மீதுள்ள தேவனின் அளவுகடந்த அபிஷேகம், அற்புதங்கள் அடையாளங்கள் மூலம் வெளிப்படுகிறது. 1979-ஆம் ஆண்டு முதல், தேவன் சாது ஐயாவை உலகின் 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்று தமக்கு சாட்சியாக நிறுத்தியுள்ளார்.

வெப் ஸ்டார்
சகோதரர் சாது சுந்தர் செல்வராஜ் அவர்களின் புத்தகங்கள், காணொளிகள் மற்றும் ஒலிப்பதிவுகளை எங்கள் வெப் ஸ்டார்-ல் உங்களுக்கு விருப்பமான தொகையைக் காணிக்கையாகக் கொடுத்து, பதிவிறக்கம் செய்யலாம். தேவ சிங்காசனத்திலிருந்து வரும் அற்புதமான வெளிப்பாடுகள் மற்றும் போதனைகளைத் தவறவிடாதீர்கள்.
மேலும் பார்க்ககர்த்தருடைய வார்த்தை
உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
- (லூக்கா 21:34)
தம் மக்களின் வாழ்வில்
தேவன் செய்த நன்மைகள்!
வெளிப்படுத்தின விசேஷம் 6-ஆம் அதிகாரத்தைப் பற்றிய செய்தியைப் பகிர்ந்து கொண்டதற்காக நன்றி! அந்தச் செய்தியில், தேவன் நமக்குச் செய்தவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள். நான் முழங்காலில் நின்று, கண்ணீருடன் மனந்திரும்புதலின் ஜெபத்தை ஏறெடுத்துக் கொண்டிருந்தபோது, கர்த்தர் என் இடது பக்கத்தில் முழங்காற்படியிட்டு, என் தோள் மீது கைபோட்டு அரவணைத்து, “நான் உன்னுடன் இருக்கிறேன்” என்று மெல்லிய சத்தத்தில் என் காதில் சொன்னார்.
M F
சுவிட்சர்லாந்து
உங்கள் செய்திகள் மற்றும் தீர்க்கதரிசனங்களைக் கேட்டதன் மூலம் நான் அறிந்திராத சத்தியங்களை அறிந்துகொள்ள தேவன் என் மனக்கண்களைத் திறந்திருக்கிறார். உங்கள் ஊழியத்திற்கென்று விதைத்த பின்னர், தேவன் தம் வார்த்தையின் மூலம் வாக்குப்பண்ணியபடி, என் வங்கிக் கணக்கில் வராமல் தடைபட்டிருந்த பணத்தை அருளிச் செய்தார். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
R R
அஸ்ஸாம், இந்தியா
மூச்சுத்திணறல் காரணமாக மூச்சு விடுவதில் மிகவும் சிரமப்பட்ட நான் அதனால் மேலும் பல கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். அந்நிலையில் எனக்கு சுகம் கிடைக்க ஜெபிக்குமாறு உங்களுக்கு எழுதியிருந்தேன். தேவனுடைய இரக்கத்தினால், இயேசு ஊழியங்களுக்கு ஜெப விண்ணப்பம் அனுப்பிய அடுத்த நாளிலிருந்தே நான் சுகமடையத் தொடங்கினேன். என்னைச் சுகமாக்கிய கர்த்தருக்கு நன்றி.
P G
யு.கே
நாங்கள் காரில் வெளியில் சென்று வீடு திரும்பியபோது, ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து கார் ஓட்ட முடியாததால், சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டோம். ஆலங்கட்டிகள் விழும் சத்தம் பயங்கரமாகக் கேட்டது. திடீரென ஏஞ்சல் டிவி-யின் வாக்குத்தத்த வசனம் என் நினைவுக்கு வர, அதை அறிக்கையிட்டு ஜெபித்தேன். ஒருசில நிமிடங்களுக்குள் ஆலங்கட்டி மழை நின்றுவிட்டது. அதன் பின்னர் பாதுகாப்பாக வீடு வந்து சேர்ந்தோம்.
M
பெங்களூரு, இந்தியா
"என் சிங்காசனம் நிலைநிறுத்தப்பட எனக்கு ஓர் இடத்தை உருவாக்குங்கள்!"
என் வாழ்நாள் முழுவதும் சில அற்புதமான ஆவிக்குரிய தருணங்களை நான் அனுபவித்திருக்கிறேன். தேவனாகிய கர்த்தர் என்னிடம் தெளிவாகப் பேசி, அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான வழிகாட்டுதல்களை பலமுறை அளித்திருக்கிறார்.
