நாங்கள் யார்?
கர்த்தருடைய வருகைக்கான வழியை ஆயத்தப்படுத்துதல்
சாது சுந்தர் செல்வராஜ் அவர்கள் இயேசு ஊழியங்களின் நிறுவனர் ஆவார். இது ஒரு தீர்க்கதரிசன-சுவிசேஷப் பணியாகும். கிறிஸ்து இயேசுவை அதிகம் அறியாத சமூகத்திற்கு சுவிசேஷத்தை அறிவிப்பதற்கான கர்த்தரின் அழைப்பை சாது ஐயா அவர்கள் இவ்வூழியத்தின் மூலம் நிறைவேற்றி வருகிறார். சாது ஐயாவின் மீதுள்ள தேவனின் அளவுகடந்த அபிஷேகம், அற்புதங்கள் அடையாளங்கள் மூலம் வெளிப்படுகிறது. 1979-ஆம் ஆண்டு முதல், தேவன் சாது ஐயாவை உலகின் 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்று தமக்கு சாட்சியாக நிறுத்தியுள்ளார்.
கர்த்தருடைய வார்த்தை
செப்டம்பர்
உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்
- (லூக்கா 21: 34)
Testimonies
Prayer Request
"என் சிங்காசனம் நிலைநிறுத்தப்பட எனக்கு ஓர் இடத்தை உருவாக்குங்கள்!"
என் வாழ்நாள் முழுவதும் சில அற்புதமான ஆவிக்குரிய தருணங்களை நான் அனுபவித்திருக்கிறேன். தேவனாகிய கர்த்தர் என்னிடம் தெளிவாகப் பேசி, அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான வழிகாட்டுதல்களை பலமுறை அளித்திருக்கிறார்.
