சாட்சிகள்
தேவன் தம்முடைய மக்களின் வாழ்வில் செய்த நன்மைகள்!
நீங்கள் நடத்திய கூட்டம் ஒன்றில் பங்குபெற்றேன். அந்த சபைக்கு சென்றதும், உங்களை நேரில் பார்த்ததும் அதுவே முதல் முறை. நீங்கள் சபைக்குள் வந்தபோது, என்னுடைய வரிசையின் அருகில்தான் கடந்து சென்றீர்கள். அப்போது நான் திரும்பி உங்களைப் பார்த்தேன். என்னால் உங்களைச் சரியாகப் பார்க்க முடியவில்லை, மீண்டும் திரும்பிப் பார்க்கவும் பயமாக இருந்தது. தேவனுடைய பரிசுத்தம் அந்த அறைக்குள் வியாபித்திருந்தது. என் உடல் நடுங்கத் தொடங்கியது. நான் அழ ஆரம்பித்துவிட்டேன். நான் அப்படியே வியப்பில் ஆழ்ந்திருந்த நிலையில், நீங்கள் பிரசங்கித்த வார்த்தைகள் முற்றிலும் உண்மையே என்று விளங்கியது.
என்.ஸீ
வொராகோ
பெண்கள் தேவனுக்கு விசேஷமானவர்கள் (Women are special to God)” என்ற உங்கள் புத்தகத்தை வாசித்தேன், நம்முடைய பரம பிதா நம்மேல் இவ்வளவு கரிசனையாயிருக்கிறார் என்ற உண்மை என்னை திளைப்பில் ஆழ்த்தியது. அதில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி, தாய் போன்ற தேவனுடைய சுபாவம் ஆகும். என் சிறு வயதிலேயே நான் இயேசுவை என் தகப்பனாகவும், இரட்சகராகவும் அறிந்து ஏற்றுக்கொண்டிருந்தாலும், இயேசு என்னைப் பார்க்கும் விதத்தில் நானும் என்னைப் பார்க்கவும், ஏற்றுக்கொள்ளவும் போராடிக் கொண்டிருந்த நான் இப்போது அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன், உங்களுக்கு நன்றி.
ஜே.எம்
பிலிப்பைன்ஸ்
எருசலேம் திறந்த வானங்கள் மாநாடு மற்றும் சுற்றுலாவில் என் மனைவியும் நானும் பங்கேற்றோம். இந்த மாநாட்டை ஒழுங்கு செய்ததற்காக உங்களுக்கும், இயேசு ஊழியங்களுக்கும் என் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். வரவிருக்கும் LDPTC பட்டமளிப்பு விழாவுக்காகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். அபிஷேகம் நிறைந்த பிரசங்கங்களுக்காக கர்த்தருக்கு அதிகமாக நன்றி செலுத்துகிறேன்.
டபிள்யூ.கே
யுஎஸ்ஏ
ஈமெயிலில் உங்களுக்கு என் ஜெப விண்ணப்பத்தைத் தெரிவித்து, பதிலும் பெற்றுக்கொண்டேன். என் அப்பா 4 ஆண்டுகளாக வேலையில்லாமல் இருந்ததால் எங்களுக்கு நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. ஆனால் இன்று, என் அப்பாவின் நண்பர் அவரை அழைத்து நிதி நிர்வாகி வேலையைக் கொடுத்திருக்கிறார், நல்ல சம்பளமும் கொடுத்து, அவர் உயிரோடு இருக்கும் வரை அந்த வேலையைச் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் எல்லா நம்பிக்கையையும் இழந்து, மன அழுத்தத்தில் இருந்த வேளையில் இயேசு எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றினார்.
என்
இந்தியா
என் சகோதரனுக்காக பரலோகத்தை நோக்கி விண்ணப்பம் செய்ததற்காக அன்பான சகோதரர் சாது அவர்களுக்கு நன்றி. என் சகோதரனுக்கும், அவருடைய குடும்பத்திற்கும் தேவன் செய்த அற்புதம் ஆச்சர்யமானது. கிருபையும், அன்பும், நிறைந்த மகத்துவமான நம் தேவன் அவரை இருளிலிருந்து விடுவித்து, அவருடைய ஆயுசு நாட்களைக் கூட்டிக் கொடுத்திருக்கிறார். ஆபத்தான நிலையிலிருந்து விடுபட்டிருக்கும் என் சகோதரரால் அவருடைய குடும்பத்தினரை அடையாளம் காண முடிகிறது. படுக்கையிலிருந்து எழுந்து நடக்க உதவியாக தன் கைகளையும் பாதங்களையும் கட்டவிழ்த்து விடுமாறு தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சி.பி
இந்தியா
உங்கள் புத்தகங்கள் அனைத்தும் பரிசுத்த ஆவியின் வரங்களைப் பற்றிப் பேசுவதாகவும், அந்த வரங்களில் பெருகுவதற்கான வெளிப்பாடுகள் மற்றும் நடைமுறை வழிகள் நிறைந்ததாகவும் உள்ளன. அதற்காக உண்மையில் நான் தேவனை ஸ்தோத்தரித்து, நன்றி செலுத்துகிறேன். அவை என் வாழ்க்கையை விசேஷித்த விதத்தில் தொட்டிருக்கின்றன.
கே.பி
பிலிப்பைன்ஸ்
“பரிசுத்த அலங்காரம் (Beauty of Holiness)” என்ற உங்கள் புத்தகத்தை வாசித்தேன், அது எனக்கு அளவற்ற விதத்தில் ஆசீர்வாதமாக இருந்தது. அந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்ட வேத சத்தியங்கள் பரிசுத்தத்திற்கான என் வாஞ்சையையும், அந்தப் பாதையில் நடக்கும் எண்ணத்தையும் முடுக்கி விட்டிருக்கின்றன. தேவனுக்கு நன்றி.
ஏ.என்
யுஎஸ்ஏ
எனக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபிக்குமாறு கேட்டு ஜெப விண்ணப்பம் அனுப்பியிருந்தேன். அதற்கு நீங்கள் ஏசாயா 66:9ஐ வாக்குத்தத்தமாகக் கூறி, “கவலைப்படாதீர்கள், சரியான நேரத்தில் தேவன் உங்களுக்குக் குழந்தையைக் கொடுத்து ஆசீர்வதிப்பார், உங்களை மகிழச் செய்வார்” என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள். தேவன் கொடுத்த இந்த வாக்குத்தத்தம் உண்மையில் நிறைவேறியிருக்கிறது. தேவனுக்கே துதி.
ஆர்.ஆர்
இந்தியா
எனக்காக ஜெபித்த உங்களுக்கு மிக்க நன்றி. காலை எழுந்தபோது பெரிய விடுதலையை உணர்ந்தேன்! எனக்காக நீங்கள் பரிந்து பேசியதைப் பெரிதாகக் கருதுகிறேன். ஏராளமான தாக்குதல்களை சந்தித்து வரும் எனக்கு உங்கள் ஜெபம் ஒரு வித்தியாசத்தை உணரச் செய்தது.
கே.டி
தென் ஆப்பிரிக்கா
சரியான நேரத்தில், “கழுகுகளைப் போலக் காத்திருத்தல் (Waiting as Eagles)” என்ற தீர்க்கதரிசி சாது சுந்தர் செல்வராஜ் அவர்களின் புத்தகத்தை படிக்க நேரிட்டது. அதன் மூலம் எனக்கு மிகுந்த ஆசீர்வாதமும், நல்ல புரிந்துணர்வும் கிடைத்திருக்கிறது என்பதை சொல்லியே ஆக வேண்டும்.
ஏ.ஐ
நைஜீரியா
“பெண்கள் தேவனுக்கு விசேஷமானவர்கள் (Women are special to God)” என்ற புத்தகத்தை பதிவிறக்கம் செய்து படித்தேன். இந்தப் புத்தகம் என்னைப் பற்றி அறிந்து கொள்ள எனக்கு உதவியாக இருந்தது. நமக்கும் தேவனிடம் தருணங்கள் உண்டு என்பதையும் அறிந்துகொண்டேன். இந்தப் புத்தகத்தை எழுதியதற்காக உங்களுக்கு நன்றி. தேவனுடைய பார்வையில் நாம் யாராக இருக்கிறோம் என்பதை நன்றாகக் கற்றுக்கொண்டோம்.
கே
இந்தியா
சில பிரச்சனைகள் காரணமாக கருத்தரிக்க முடியாமல் இருந்த நான் எனக்காக ஜெபிக்கும்படி இயேசு ஊழியங்கள் நிறுவனத்தினரிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். அதன் பின்னர் எனக்குக் கருத்தரிக்கும் பாக்கியம் கிடைத்து, எந்தப் பிரச்சனையும் இல்லாமல் குழந்தை பிறந்தது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
பி.டி.எல்
ஆஸ்திரேலியா
சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதற்கான என்னுடைய ஜெப விண்ணப்பத்திற்கு பதிலாக சாது அப்பாவிடமிருந்து ஒரு வாக்குத்தத்த வசனத்தைப் பெற்றுக்கொண்டேன். அதன்படி இப்போது நான் சொந்த வீடு வாங்கிவிட்டேன். நானும் என் குடும்பமும் ஆசீர்வதிக்கப்பட்டு மகிழ்ச்சியாக இருக்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மனமார நன்றி செலுத்துகிறேன்.
எஸ்.ஐ
இந்தியா
7-நாள் உபவாச ஜெபத்தின் முதல் நாள் மாலை கடைசிப் பகுதியில், மேடையிலிருந்து ஜீவத்தண்ணீர் புறப்பட்டு வருகிறது என்று சாது அப்பா சொன்னார்கள். அப்போது அந்நியபாஷையில் ஜெபித்துக் கொண்டிருந்த நான் அந்த ஜீவத்தண்ணீர் என்னை தேவனுடைய அபிஷேகத்துடன் சூழ்ந்து கொண்டதை விசுவாசித்தேன். தேவன் என்னைத் தம் ஆசீர்வாதங்களால் ஆசீர்வதித்தார். எல்லா மகிமையும் தேவனுக்கே.
ஆர்.எம்.எஸ்
இந்தியா
சில மாதங்களுக்கு முன்னர், உங்களிடம் ஜெபிக்கும்படிக் கேட்டிருந்தேன், அதன் மூலம் கர்த்தருடைய கரம் என்னைப் போஷித்து, பாதுகாத்து, குணமாக்கியதைக் காண முடிந்தது.
என்.சி.ஆர்
கென்யா
உங்கள் புத்தகங்களை வாசிப்பதும், உங்கள் செய்திகளைக் கேட்பதும் என் வாழ்க்கையில் பெரிய காரியங்கள் நிகழச் செய்திருக்கின்றன. தேவனையும், கிறிஸ்தவத்தையும் பற்றி அதிகமாக அறிந்து கொண்டேன்.
ஆர்.ஓ
நைஜீரியா
எனக்கு நல்ல வேலை கிடைக்க ஜெபிக்கும்படி கேட்டு உங்களுக்கு ஜெப விண்ணப்பம் அனுப்பியிருந்தேன். உங்கள் ஜெபங்களும், தீர்க்கதரிசனங்களும் மெய்யாகி இருக்கின்றன. உங்கள் ஜெபத்திற்கு நன்றி.
கே.ஆர்
இந்தியா
உங்கள் புத்தகங்கள் மற்றும் ஏஞ்சல் டிவியில் வரும் போதனைகளை எங்கள் சபை பிரசங்கங்களில் பயன்படுத்துகிறோம். எங்கள் சபையிலும் அதே இயற்கைக்கு அப்பாற்பட்ட அனுபவங்கள் கிடைக்கப்பெற்றதை பெரும் ஆசீர்வாதமாக உணர்கிறோம். உங்கள் புத்தகங்கள் மற்றும் ஏஞ்சல் டிவியில் வரும் போதனைகளுக்காக நன்றி.
ஆர்
பிலிப்பைன்ஸ்
இயேசு ஊழியங்கள் தலைமை அலுவலகக் கட்டிடத்திற்கான நிலத்தில் ஜெபம் நடந்ததையும், ஏழு நாட்கள் உபவாச ஜெபத்திற்குப் பின்னர் கட்டிட வேலைகள் தொடங்கியதையும் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருந்தது. இணையத்தில் இவற்றைப் பார்த்தபோது மிகப்பெரிய வல்லமையையும், மகிமையான தேவபிரசன்னத்தையும் உணர முடிந்தது. நீங்கள் எஜமானரின் ஊழியத்தில் 44 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் இந்த வேளையில் கர்த்தர் செய்து வந்த எல்லா அற்புதமான செயல்களையும் நினைத்து களிகூருகிறேன்.
ஜே.எம்
இந்தியா
ஜெபிக்கும்படி கேட்டு உங்களுக்கு ஈமெயில் அனுப்பியிருந்தேன்; ஏறக்குறைய வேலையை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்த எனக்கு ஒருசில நேர்காணல்களில் பங்கேற்றும் வேலை கிடைக்கவில்லை. தேவகிருபையால், உங்கள் ஜெபத்திற்குப் பின்னர், ஒரு வங்கியில் மேனேஜராக பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. அது நிரந்தரமான வேலையாகவும் இருக்கிறது.
பி.ஆர்
இந்தியா
மூச்சுத்திணறல் காரணமாக மூச்சு விடுவதில் மிகவும் சிரமப்பட்ட நான் அதனால் மேலும் பல கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். அந்நிலையில் எனக்கு சுகம் கிடைக்க ஜெபிக்குமாறு உங்களுக்கு எழுதியிருந்தேன். தேவனுடைய இரக்கத்தினால், இயேசு ஊழியங்களுக்கு ஜெப விண்ணப்பம் அனுப்பிய அடுத்த நாளிலிருந்தே நான் சுகமடையத் தொடங்கினேன். என்னைச் சுகமாக்கிய கர்த்தருக்கு நன்றி.
P G
யு.கே
நாங்கள் காரில் வெளியில் சென்று வீடு திரும்பியபோது, ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து கார் ஓட்ட முடியாததால், சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டோம். ஆலங்கட்டிகள் விழும் சத்தம் பயங்கரமாகக் கேட்டது. திடீரென ஏஞ்சல் டிவி-யின் வாக்குத்தத்த வசனம் என் நினைவுக்கு வர, அதை அறிக்கையிட்டு ஜெபித்தேன். ஒருசில நிமிடங்களுக்குள் ஆலங்கட்டி மழை நின்றுவிட்டது. அதன் பின்னர் பாதுகாப்பாக வீடு வந்து சேர்ந்தோம்.
M
பெங்களூரு, இந்தியா
சில வருடங்களாக இந்த ஊழியத்தின் பங்காளராக இருக்கும் நான் அவ்வப்போது காணிக்கை அனுப்பிக் கொண்டிருந்தேன். சிறு காணிக்கையாக மாதந்தோறும் ரூ.1000/- அனுப்பிக் கொண்டிருந்த என்னிடம் கர்த்தர் பேசி, JM கட்டிட நிதிக்காக காணிக்கை அனுப்பச் சொன்னார். நான் ரூ.3000/- அனுப்பினேன். என்னை இவ்வாறு வழிநடத்திய தேவனுக்கு நன்றி, ஏனென்றால் ஏஞ்சல் டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளும் எனக்கு ஆசீர்வாதமாக இருக்கின்றன. அவற்றின் மூலம் ஆவிக்குரிய வளர்ச்சியும், உற்சாகமும் அடைவதோடு, ஜெபிக்கவும், ஆவிக்குரிய யுத்தம் செய்யவும் கற்றுக் கொண்டு, ஆவிக்குரிய உணர்வடைந்து வருகிறேன்.
V B
தெலுங்கானா, இந்தியா
“கடைசி கால ஏழு கொம்புகளின் அபிஷேகம் (Last Days Seven Horns Anointing)” மற்றும் “கைலாச மகரிஷி (The Maharishi of Mt. Kailash)” என்ற இரண்டு புத்தகங்களையும் வாசித்து முடித்துவிட்டேன். இந்த அற்புதமான புத்தகங்களை எழுதியதற்காக பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி செலுத்துகிறேன்.
D
மதுரை, இந்தியா
பொருளாதார விடுதலைக்காக ஜெபிக்கும்படி கேட்டு எழுதியிருந்தேன். நீங்கள் எனக்கும் என் குடும்பத்திற்கும் பொருளாதார ஆசீர்வாதத்திற்கான வாசல்கள் திறக்கும்படி ஜெபித்தீர்கள். கர்த்தர் எங்களுக்கு ஒரு புதிய தொழிலைக் கொடுத்திருக்கிறார், அது நன்றாக வளர்ச்சியடைந்து வருகிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
I
நைஜீரியா
தீர்க்கதரிசி சாது அவர்கள் எழுதிய “கர்த்தருக்குக் காத்திருத்தல் (Waiting On God)” என்னும் புத்தகத்தை வாசித்து முடித்ததை சாட்சியாக சொல்ல விரும்புகிறேன். அந்த புத்தகம் எனக்கு உண்மையில் மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தது, ஒரு புதுவித உணர்வடைய என் கண்களும் காதுகளும் திறக்கப்பட்டன. மிக்க நன்றி.
D
யு.எஸ்.ஏ
உங்கள் புத்தகங்களும் போதனைகளும் என் வாழ்க்கையை மாற்றியிருக்கின்றன. இயேசு அதிசீக்கிரமாக வரும் காலம் இதுவே என்றும், மனந்திரும்பி, நீதியும், பரிசுத்தமும் உள்ளவர்களும், கறையற்றவர்களும், இருதயத்தில் பெருமையற்றவர்களுமாக வாழுங்கள் என்றும் சொன்னீர்கள். உங்கள் போதனைகள் எனக்கு ஆசீர்வாதமாகவும், உதவியாகவும் இருக்கின்றன. என்னுடைய ஆவியின் எழுப்புதலுக்கு நீங்கள் அதிகம் உதவி வருகிறீர்கள்.
M
ஆப்பிரிக்கா, ஸிம்பாப்வே
எனக்கு சம்பள உயர்வு கிடைக்க ஜெபிக்கும்படி கேட்டு எழுதியிருந்தேன். அதோடு, எனக்கு உயர்வு கிடைத்ததும், இயேசு ஊழியங்களுக்கு அனுப்பும் மாதாந்திர காணிக்கையையும் கூட்டிக் கொடுப்பதாக பொருத்தனை செய்தேன். கர்த்தராகிய இயேசுவுக்கு நன்றி, ஏழு வருடங்களாக பிள்ளையற்ற மலடியாக இருந்த எனக்கு ஒரு குழந்தையைக் கொடுத்த அதே நாளில் தேவன் பதவி உயர்வும் அருளிச் செய்தார்.
S
ஆஸ்திரேலியா
நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைக்காக ஜெபிக்கும்படி கேட்டு உங்களுக்கு எழுதியிருந்தேன். நான் எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல வேலையும், சம்பள உயர்வும் கிடைத்தது.
என்னுடைய தசமபாகங்களும், காணிக்கைகளும் சரியான இடத்தில், நல்ல நிலத்தில் சென்று சேருவதைக் குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஜெபங்களுக்கு நன்றி.
K K
இந்தியா
நான் தீர்க்கதரிசி சாது அவர்களை அறிந்ததைக் குறித்து மிகுந்த நன்றியுணர்வுடன் உள்ளேன், அதனால் என்னில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன, வாழ்க்கையைக் குறித்த என் கண்ணோட்டம் மாறியிருக்கிறது. ஜீவனுள்ள மெய்யான தேவனைப் பின்பற்றுவதைப் பற்றிக் கற்றுக் கொள்ள இன்னும் ஏராளம் உண்டு.
J D
பிலிப்பைன்ஸ்
என் தகப்பனார் மதுபான அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற ஜெபிக்குமாறு கேட்டு உங்களுக்கு எழுதியிருந்தேன். உங்கள் வல்லமையான ஜெபங்களுக்கு நன்றி. இப்போது என் தகப்பனார் மதுபான அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார். அல்லேலூயா!
“ஆசரிப்புக்கூடாரத்தின் ஜெப இரகசியம் (Prayer Secret in the Tabernacle)” என்ற உங்கள் புத்தகத்தை வாசித்ததிலிருந்து தேவன் என்னுடன் பேசி கர்த்தரோடு நெருங்கிய ஐக்கியம் கொள்ளும்படிச் செய்திருக்கிறார். உங்கள் புத்தகங்களுக்காக நன்றி.
A K
நேபாளம்
உங்கள் மின்-புத்தகம் எனக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தது. எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதைச் செய்யும்போது என் ஜெபங்கள் கேட்கப்படும் என்பதை அறிந்து கொண்ட எனக்கு மிகுந்த சந்தோஷமும், சமாதானமும் உண்டாயிற்று. பிதா நம்மை அதிகமாக நேசிப்பதால், நாம் தம்முடைய சித்தத்தின்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்காக இந்த சத்தியங்களை வெளிப்படுத்துகிறார் என்ற உண்மையை அறிந்த என் இருதயம் இப்போது களிகூருகிறது. இந்த மின்-புத்தகத்தில் உள்ள எல்லா சத்தியங்களையும் நான் பின்பற்றுவேன்.