சாட்சிகள்


தேவன் தம்முடைய மக்களின் வாழ்வில் செய்த நன்மைகள்!

உங்கள் அறிவிப்பு கடிதம் வந்தபோது, இயேசு ஊழியங்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற மிகுந்த வாஞ்சையினால் என் இருதயம் நிரம்பிற்று. நான் விதைப்பதற்கான விதையைக் கொடுக்கும்படி கர்த்தரிடம் ஊக்கமாக மன்றாடினேன். அந்த வாஞ்சை என்னில் மிக வலுவாக இருந்தது – நான் ஜெபிப்பதோடு நிறுத்தாமல், விசுவாசத்தில் ஒரு அடியும் எடுத்து வைத்தேன். சென்ற மாதம், ஒரு வாக்குறுதி செய்யும்படி கர்த்தர் என்னை ஏவினார்: ஏறக்குறைய என் வயதிற்கு (45) சமமான 4,500 பிலிப்பைன் பீசோ தொகையை ஊழியத்திற்கு கொடுக்க அர்ப்பணித்தேன். அது என் வாழ்க்கையை மட்டுமல்ல, உங்கள் ஊழியம் நடைபெற்ற வருடங்களையும் கொண்டாடுவதாக எடுத்துக்கொண்டேன்.
நான் முற்றிலும் விசுவாசத்தில் வாழ்ந்து வந்தபடியால், அந்த சமயத்தில் அவ்வளவு பெரிய தொகையை எப்படி சம்பாதிப்பேன் என்று எனக்கு தெரியவில்லை. இருப்பினும், என் இருதயத்தின் ஆழத்தில், நான் வாக்குப்பண்ணினதை அவரே எனக்கு அருளிச் செய்வதாக கர்த்தரிடமிருந்து வந்த உறுதிப்பாட்டை உணர்ந்தேன். அவருடைய நன்மைத்தன்மையும், உண்மையும் ஒருபோதும் தவறுவதில்லை! அவர் அருளிச் செய்வார் என்று என் இருதயம் காத்திருந்த எனக்கு என் பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கர்த்தர் முழு தொகையையும் அருளிச் செய்தபோது, நான் வியப்பில் ஆழ்ந்துவிட்டேன். என்னுடைய சூழ்நிலையில் சாத்தியமற்றதாகத் தோன்றிய ஒன்று நடந்தது, ஏனென்றால் அவரால் எல்லாம் கூடும். மகிமையும், கனமும் நம் தேவனுக்கே உரியது!

சி.,

பிலிப்பைன்ஸ்

உங்கள் ஊக்கமான ஜெபங்களுக்கு நன்றி. கிருபையுள்ள நம் தேவன் உங்கள் ஜெபங்களைக் கேட்டு, என் இரண்டு மகள்களுக்கும் அருமையான வாழ்க்கை துணைகளை கொடுத்து ஆசீர்வதித்திருக்கிறார். என் மகள்களின் வாழ்க்கையில் தேவன் செய்த வல்லமையான அற்புதத்திற்காக அவரை துதிக்கிறேன். அதற்கு காரணம் உங்கள் ஜெபங்களே!

ஏ.ஜே.,

இந்தியா

சில நாட்களுக்கு முன், என் இருதயத்தில் அளவுக்கு அதிகமான ஒரு பாரத்தை உணர்ந்தேன். கர்த்தர் என்னை சுகமாக்கினார். மனதில் கடுமையான போராட்டம் ஏற்பட்டபோது, என் மனதை குணமாக்கும்படி கர்த்தரிடம் கேட்டேன். கர்த்தர் உங்கள் ஜெபத்தைக் கேட்டு என்னை சுகமாக்கினார். எனக்கு மிகுந்த சமாதானம் உண்டானது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

ஐ.,

இந்தியா

ஒரு கூடுகைக்கு வரும்படி இன்னொரு பள்ளி முதல்வரிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அங்கு போனால், எவ்வித கற்பிக்கும் தேர்வும் இல்லாமல் ஒரு வேலைக்கு என்னைத் தேர்வு செய்தார்கள்! சம்பளமும் முந்தினதை விட இரு மடங்கு அதிகம். இந்த புதிய வேலைக்காக தேவனுக்கு நன்றி.

ஏ.ஏ.,

இந்தியா

என் மகனின் 10-ம் வகுப்பு அரசுத் தேர்வுக்காக ஜெபித்ததற்கு நன்றி. அவன் 83% மதிப்பெண்களுடன் ‘A’ க்ரேட்-ல் தேர்ச்சி பெற்றிருக்கிறான். தேவனுக்கே மகிமை!

பி.,

இந்தியா

உங்கள் ஜெபங்களுக்காக இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்கிறேன். என் இருதயத்தில் இருக்கும் அடைப்பைப் பற்றி கண்டறிய எனக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. தேவனுடைய இரக்கத்தினால், அங்கு அடைப்பு இல்லை! ஒரு சிறு புண் மட்டுமே இருப்பதால் ஸ்டென்ட் வைக்க வேண்டிய அவசியமும் இல்லை, தேவன் அருளிய தெய்வீக சுகத்திற்காக அவருக்கு துதியும் நன்றியும் செலுத்துகிறேன்!

ஜே.பி.,

இந்தியா

உங்கள் ஜெபங்களுக்கு நன்றி. “என் சகோதரனின் பிரச்சனைகளை கர்த்தர் தீர்ப்பார் என்றும், தேவன் அவரை விடுவிப்பார், அவர் தேவனை மகிமைப்படுத்துவார்” என்றும் நீங்கள் தீர்க்கதரிசனமாக சொன்னீர்கள். இந்த வார்த்தை எங்களுக்கு மிகுந்த ஆறுதலும், உற்சாகமுமாய் இருந்தது. என் சகோதரனுக்கு வழக்கில் வெற்றி கிடைத்தது, தேவனுடைய விடுதலையை உணர்வுபூர்வமாகவும், சரீரத்திலும், பொருளாதாரத்திலும் அனுபவித்து வருகிறோம். அவருடைய நாமத்திற்கு மகிமை!

கே.டபிள்யூ.,

யூ.கே

உங்கள் ஊழியத்திற்கு ஒரு ஜெப விண்ணப்பத்தை அனுப்பியிருந்தேன், உண்மையுள்ள நம் தேவன் அதற்கு பதிலளித்தார். மேலான நிபந்தனைகள் மற்றும் பலன்களுடன் புதியதொரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். என்மீது இரக்கம் காண்பித்த சர்வவல்லமையுள்ள தேவனுக்கே எல்லா மகிமையையும் செலுத்துகிறேன்.

ஜே.ஹெச்.,

பெல்ஜியம்

உங்கள் ஊழியத்திற்கு ஒரு ஜெப விண்ணப்பத்தை அனுப்பியிருந்தேன், உண்மையுள்ள நம் தேவன் அதற்கு பதிலளித்தார். மேலான நிபந்தனைகள் மற்றும் பலன்களுடன் புதியதொரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். என்மீது இரக்கம் காண்பித்த சர்வவல்லமையுள்ள தேவனுக்கே எல்லா மகிமையையும் செலுத்துகிறேன்.

என்.சி.ஆர்.,

அமெரிக்கா

நழுவிய என் தோள்பட்டையையும், வலியுள்ள என் முழங்காலையும் அறுவை சிகிச்சையின்றி சுகமாக்கிய பிதாவாகிய தேவனுக்கு நன்றி நிறைந்த இருதயத்துடன் நன்றி செலுத்துகிறேன்! இது ஜெபத்திற்குக் கிடைத்த பதில். சகல துதியும் மகிமையும் தேவனுக்கே!

எஸ்.சி.,

ஹாங்காங்

மைசூரில் உள்ள ஒரு ஃபார்மசூடிக்கல் நிறுவனத்தில் எனக்கு ஜூனியர் ட்ரக் சேஃப்டி அசோஷியேட் வேலை கிடைத்திருக்கிறது. உங்கள் ஊக்கமான ஜெபத்திற்கு நன்றி!

ஆர்.பி.,

இந்தியா

தேவன் உங்கள் ஜெபங்களைக் கேட்டார். இப்போது நான் சுகமாக இருக்கிறேன், இனி மருத்துவ சிகிச்சை தேவையில்லை. வல்லமையுடைய நம் தேவனுடைய கிருபையால் நான் சுகம் பெற்றேன்.

எஸ்.,

இந்தியா

கர்த்தர் எனக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்து ஆசீர்வதித்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். நம் ஜெபங்களுக்கு பதில் கொடுத்த ஆண்டவராகிய இயேசுவுக்கு நன்றி செலுத்துகிறேன், உங்கள் ஜெபங்களுக்கு நன்றி.

ஜே.,

இந்தியா

உங்கள் ஜெபங்களுக்கு நன்றி. நீங்கள் சட்டரீதியான என் பிரச்சனைகள் தீரவும், பொருளாதார ஆசீர்வாதம் உண்டாகவும் ஜெபித்தீர்கள். தேவன் பதில் கொடுத்தார். அவர் என் பொருளாதாரத் தேவைகள் அனைத்தையும் சந்தித்தார், நான் வெற்றிகரமாக வழக்கிலிருந்து வெளியே வந்தேன். தேவனுக்கே மகிமை!

போதகர் டி.,

இந்தியா

என் இளைய மகனுக்கு நரம்பியல் வளர்ச்சி குறைபாடு இருக்கக் கூடாது என்று ஜெபிக்கும்படி கேட்டிருந்தேன். தேவன் நம் ஜெபங்களைக் கேட்டார் – அவனுடைய வளர்ச்சியின் மைல்கற்கள் நன்றாக இருக்கின்றன. இந்த கடினமான நேரத்தில் உங்கள் ஜெபங்களில் நான் உணர்ந்த உங்கள் ஆதரவுக்காக நன்றி.

ஆர்.ஆர்.எஸ்.,

இந்தியா

உங்கள் பிரார்த்தனைகளுக்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி. என் தமனியில் அடைப்பை சரிபார்க்க எனக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. கர்த்தர் கிருபையால், அடைப்பு கரைந்துவிட்டது! இப்போது ஒரு புண் மட்டுமே உள்ளது, மேலும் ஸ்டென்ட் தேவையில்லை. அவரது தெய்வீக குணப்படுத்துதலுக்காக நான் கடவுளைப் புகழ்ந்து நன்றி கூறுகிறேன்!

ஜே.பி.,

இந்தியா

என் மகளின் சுகத்தை குறித்த என் ஜெப விண்ணப்பத்தைக் கேட்ட கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவளுக்கு ஹார்மோன் சமநிலையின்மை இருந்ததால் ஆறு மாதங்களாக மாதவிலக்கு வரவில்லை. அவளுக்கு 27 வயதாகியும் இன்னும் திருமணமாகவில்லை. உங்கள் ஜெபத்திற்குப் பின் அவளுக்கு மாதவிலக்கு வரத் தொடங்கியிருக்கிறது. தேவனுடைய சுகமாக்கும் வல்லமைக்காக அவருக்கே மகிமை!

ஜி.டி.,

பிலிப்பைன்ஸ்

என் சகோதரி மகனின் உடல் சுகத்திற்காக ஜெபிக்கும்படி கேட்டிருந்தேன். தேவனுடைய இரக்கத்தினால், அவன் முற்றிலும் சுகமடைந்து, இறுதி தேர்வு எழுதினான். அதோடு, என் கர்ப்பப்பையில் உள்ள கட்டி சுகமாகவும் ஜெபிக்கக் கேட்டிருந்தேன். ஸ்கேன் செய்து பார்த்தபோது, என் கர்ப்பப்பையில் கட்டியே இல்லை என்று வந்தது! உங்கள் ஜெபங்களுக்காக நன்றி. என் ஆண்டவராகிய இயேசுவின் இரக்கத்திற்காக அவருக்கு நன்றி. எல்லா மகிமையையும் நம் கர்த்தருக்கே செலுத்துகிறேன்.

வி.ஏ.,

இந்தியா

பல வருடங்களாக உங்கள் ஊழியத்தை பின்பற்றி வரும் நான் உங்களை என் ஆவிக்குரிய தகப்பனாக கொண்டு மகிழ்கிறேன். உங்கள் போதனைகள் என் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன, அவற்றை நான் பெரிதும் மதிக்கிறேன்.

டி.எல்.,

ஆப்பிரிக்கா

எனக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜெபிக்க சொல்லி ஜெபக்குறிப்பு அனுப்பி இருந்தேன். தேவகிருபையினால், 23,000 ரூபாய்க்கு பதில் 32,000 ரூபாய் கிடைத்தது. தேவனுடைய ஏராளமான ஆசீர்வாதத்திற்காக அவருக்கே மகிமையும் கனத்தையும் செலுத்துகிறேன்.

எல்.,

இந்தியா

எனக்காக ஜெபிக்கும்படி ஈமெயில் மூலம் கேட்டிருந்தேன், கடந்த ஒன்பது மாதங்களாக விபச்சாரம் மற்றும் போதைப் பொருட்களிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறேன் என்பதை பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஆண்டவராகிய இயேசுவிடம் ஜெபத்தில் என்னை தாங்கியதற்காக நன்றி. அவர் கொடுத்த விடுதலைக்காக என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

ஐ.ஏ.,

இந்தோனேஷியா

ஒரு பிள்ளையை இழந்ததும், இன்னொரு பிள்ளையின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிக்கும்படி கேட்டு உங்களுக்கு எழுதினேன். எங்கள் வாழ்க்கையில் சர்வவல்லமையுள்ள தேவனுடைய நன்மைக்காகவும் பிரசன்னத்திற்காகவும் அவருக்கு நன்றி – அவர் நம் ஜெபத்தைக் கேட்டார்! எங்களோடு சேர்ந்து கர்த்தருடைய பாதத்தில் கதறியதற்காக நன்றி. இப்போது என் வயிற்றில் ஒரு பிள்ளை இருக்கிறது, அந்த பிள்ளை கடைசிகால தீர்க்கதரிசியாக இருக்கும் என்று அறிவிக்கிறேன்.

டி.சி.,

ஆப்பிரிக்கா

நல்லவரும் கிருபையுள்ளவருமான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினால் நான் உயர் மதிப்பெண்கள் பெற்றேன். அந்த மதிப்பெண்களைக் குறித்து எனக்கு சந்தோஷம் இருந்தாலும், அதைவிட மேலாக, என் மீதான கர்த்தருடைய இரக்கத்தையும், நிபந்தனையற்ற அன்பையும் குறித்து மிகுந்த ஆனந்த சந்தோஷமடைகிறேன். நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்றுதான் முயற்சி செய்தேன், அவரோ எனக்கு வகுப்பிலேயே முதல் இடத்தைக் கொடுத்தார். உங்கள் ஜெபங்களுக்கு நன்றி.

ஏ.,

இந்தியா

மூன்றாம் வருடம் கல்லூரி படிப்பில் எனக்கு ஒரு உயர்வு கிடைத்தது. இந்த சாதனையில் உங்கள் ஜெபங்களுக்கும் ஆதரவுக்கும் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு என்பதை உண்மையாகவே நம்புகிறேன். நீங்கள் கொடுத்த உற்சாகம் முன்னேறி செல்லும்படி என்னை பலப்படுத்தி, ஊக்குவித்தது. என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்காக சொல்லமுடியாத அளவுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

கே.ஜி.,

இந்தியா

“கழுகுகளைப் போலக் காத்திரு” என்னும் உங்கள் புத்தகத்தை வாசித்து முடித்தேன், அது எனக்குள் ஏற்படுத்திய வாஞ்சையையும், ஆவிக்குரிய ஏக்கத்தையும் என்னால் முழுமையாக வெளிப்படுத்த முடியாது. இந்த புத்தகம் மெய்யாகவே என் கண்களைத் திறந்தது. அற்புதங்கள் நிறைந்த ஒரு பொன் சுரங்கத்தில் தவறி விழுந்ததாக உணர்கிறேன். இப்போது தினமும் இரவு நேரத்தில் கர்த்தருக்குக் காத்திருக்க அர்ப்பணிக்கிறேன். உங்கள் வார்த்தைகள் என் தீர்மானத்தை உறுதிப்படுத்தி இருக்கின்றன. தேவன் உங்களை அபரிவிதமாக ஆசீர்வதிப்பாராக.

ஜே.இ.,

நைஜீரியா

அன்பான போதகர்களாகிய நீங்கள் பகிர்ந்து கொண்ட பல சூழ்நிலைகளில் நான் இருந்திருக்கிறேன். உங்கள் போதனைகள் தெளிவையும் உறுதியையும் கொடுத்து, தேவனுடைய செய்தியை எளிதில் விளங்கிக்கொண்டு கைக்கொள்ள உதவுகின்றன. விலையேறப்பெற்ற இந்த பாடங்களைக் கற்றுக்கொடுத்ததற்காக நன்றி. அவைகளை அறிந்திருக்காவிட்டால் தேவனுடைய சத்தத்தை அறிவது கடினமாக இருந்திருக்கும்.

எம்.,

இலங்கை

கடுமையான இருதய, நுரையீரல் மற்றும் கல்லீரல் பிரச்சனைகளால் அவதிப்பட்ட என் சகோதரிக்காக ஜெபிக்கும்படி கேட்டிருந்தேன். எங்களுக்காக நீங்கள் ஜெபித்த அடுத்த நாளே தேவன் நம் ஜெபங்களுக்கு பதில் கொடுத்தார். மருத்துவர்கள் அவருடைய சரீரத்தில் ஒரு பிரச்சனையும் இல்லை என்று கண்டு, எல்லாம் நன்றாகிவிட்டது என்றார்கள். அவர் தன் சாட்சியை சந்தோஷமாக என்னிடம் பகிர்ந்து கொண்டார். நானும் அவருடைய சந்தோஷத்தை பகிர்ந்துகொள்கிறேன். இதுவரை, எங்கள் வாழ்க்கையில் தேவன் செய்த நன்மையை சாட்சியாக அறிவித்து வருகிறோம்.

ஜே.கே.,

பிலிப்பைன்ஸ்

சில நாட்களுக்கு முன் என் மனைவிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவர்கள் ஈசிஜி, 2டி எக்கோ மற்றும் இரத்த பரிசோதனைகளை செய்யச் சொன்னார்கள். எல்லா பரிசோதனை முடிவுகளிலும் அவளுக்கு பிரச்சனை இருப்பதாகவே வந்தது. இன்னொரு மருத்துவரை பார்த்தபோது, அவர் என் மனைவிக்கு லேசான மாரடைப்பு வந்திருப்பதால், ஆஞ்சியோக்ராம் செய்ய வேண்டுமென்று சொன்னார்கள். நாங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தோம். நான் இயேசு ஊழியங்களில் தொடர்புகொண்டு ஜெபிக்கும்படி கேட்டுக் கொண்டேன். ஆஞ்சியோக்ராம் முடிவுகள் எல்லாம் நன்றாக இருப்பதாக வந்தன. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!

ஏ.ஏ.,

இந்தியா

என் செமஸ்டர் தேர்வுகளைக் குறித்து கவலைப்பட்ட நான் உங்களிடம் ஜெபிக்கும்படி கேட்டிருந்தேன். தேவகிருபையினால், எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுவிட்டேன். இந்த சாதனை அவருடைய உண்மைக்கும் ஜெபத்தின் வல்லமைக்கும் சாட்சியாக இருக்கிறது. இந்த சமயத்தில் நீங்கள் ஆதரவாக இருந்து ஜெபித்ததற்கு அதிக நன்றி கடன்பட்டுள்ளேன். தேவனுடைய இரக்கத்துடன் இணைந்த உங்கள் பரிந்து பேசும் ஜெபமே இந்த சவாலான நாட்களில் என்னை தாங்கியது, என் உள்ளம் நன்றியால் நிரம்புகிறது. இந்த வெற்றிக்கான எல்லா மகிமையும் கனமும் தேவனுக்கே!

சுவி.ஜே.,

இந்தியா

உங்கள் அருமையான ஊழியத்தின் மூலம் அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். தினமும் யூட்யூபில் அபிஷேகம் நிறைந்த உங்கள் போதனைகளைக் கேட்டுக் கற்றுக்கொள்கிறேன். தற்போது நான் சபை கூட்டங்களுக்கு செல்ல முடியாததால் நீங்கள் மட்டுமே எனக்கு ஒரே கிறிஸ்தவ போதகராக இருக்கிறீர்கள். தற்போது நான் ஃபின்லாந்தின் வடக்கு வனாந்தர பகுதியில் வசிக்கிறேன். வேறெங்கும் வேலை கிடைக்காததால் இங்கு இருக்க வேண்டியதாயிற்று. அதனால் உங்கள் ஊழியம் எனக்கு இன்னும் முக்கியமானதாக உள்ளது.

ஏ.ஜே.,

ஃபின்லாந்து

என் சகோதரன் நான்கு முறை JEE மெயின் தேர்வு எழுதி, 0.01 பர்சென்டைல் வித்தியாசத்தில் JEE அட்வான்ஸ்ட் தேர்வுக்கு தகுதி பெற முடியாமல் போனது. அதனால் அது தேவசித்தம் அல்ல என்று உணர்ந்தோம். அதற்கு பதிலாக, அவன் CUET தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்றான். அதன் மூலம் அவனுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இன்டக்ரேட்டட் B.Tech (CSE) – MBA Banking and Finance பாடத்தில் இடம் கிடைத்தது. அவன் JEE தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் கூட அவனுக்கு B.Tech பட்டம் மட்டுமே கிடைத்திருக்கும். இப்போது தேவகிருபையினால் அவன் இரண்டு பட்டங்கள் ஒருசேர பெற்றுக்கொள்வான். என் சகோதரனின் தேர்வில் இடைபட்டு, தம் சித்தத்தின்படி அவன் வாழ்க்கையை அமைத்ததற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

என்.,

இந்தியா

எனக்கு சிறுநீர்ப் பிரச்சனை இருந்தது, ஸ்கேன் செய்து பார்த்ததில் பராகச் சுரப்பியின் அளவு 47-லிருந்து 42-ஆகக் குறைந்திருந்தது. ஈரல் கொழுப்புப் பிரச்சனையும் நிலை II-லிருந்து நிலை I-ற்கு முன்னேறி இருந்தது.
அதோடு, என் இடது பாதத்தில் இருந்த ஆணி அதிக வலியைக் கொடுத்தது. மருத்துவர் ஒரு பிளாஸ்டர் பயன்படுத்தும்படியும், சரியாகவில்லை என்றால், அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்றும் சொல்லியிருந்தார். ஒருமுறை மட்டுமே பிளாஸ்டரைப் பயன்படுத்தினேன், ஆணி மறைந்துவிட்டது. சரியான சிகிச்சைக்குப் பின் என் பல் ஈறு வலியும், வீக்கமும் சுகமாகி இருக்கிறது. உங்கள் ஜெபங்களுக்கு நன்றி!

எஸ்.எஃப்.,

இலங்கை

“கழுகுகளைப் போல காத்திரு” மற்றும் “தேவனுடைய நன்மைத்தன்மை” ஆகிய புத்தகங்களை வாசித்திருக்கிறேன். இந்த புத்தகங்கள் எனக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருந்ததோடு, தேவனுடனான என் உறவையும் ஆழமாக்கின. இப்போது, “அவருடைய சாயலுக்கு ஒப்பாக” மற்றும் ஆவியால் ஆளுகை செய்யப்படும் வாழ்க்கை” என்ற புத்தகங்களை வாசித்து கொண்டிருக்கிறேன். அவை உண்மையிலேயே அருமையாக இருக்கின்றன. நீங்கள் இந்த உலகத்திற்கு கிடைத்த பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறீர்கள்.

ஜே.,

கேமரூன்

சிக்கிமில் தீர்க்கதரிசன பள்ளிக்கு சென்றது எனக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. கண்கள் திறந்திருக்கும்போது காணும் தரிசனங்கள் அதிகரித்திருக்கின்றன, இப்போது பரலோகத்தை அடிக்கடி அனுபவித்து வருகிறேன். தீர்க்கதரிசனமான ஒரு நேரத்தில் தேவனோடு நடக்கிறேன், அதிகாலை 3 மணிக்கு எழுந்து, ஜெபத்தில் தேவனுக்குக் காத்திருக்கிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் என் அறையை நிரப்புகிறது. அவருடைய வலுவான பிரசன்னத்தை எப்போதும் என்னால் உணர முடிகிறது!

பி.டி.,

இந்தியா

என் மகள் செமஸ்டர் தேர்வுகளின்போது மிகவும் சிரமப்பட்டாள். அவள் தேர்ச்சி பெறுவாள் என்ற நிச்சயமற்றிருந்தோம். செமஸ்டர் தேர்வுகள் தொடங்கியபோது, நிச்சயமாக அவள் தோல்வியடைந்து விடுவாள் என்றே நினைத்தோம். ஆகவே, அவர் தேர்ச்சி பெற்றால், இயேசு ஊழியங்களுக்கு விசேஷ காணிக்கை அனுப்புவதாக பொருத்தனை செய்து ஜெபித்தோம். தேவகிருபையினால் அவள் தேர்ச்சி பெற்றாள், நானும் என் பொருத்தனையை செலுத்தினேன்.

ஐ.வி.,

இந்தியா

“கழுகுகளைப் போல காத்திரு” மற்றும் “தேவனுடைய நன்மைத்தன்மை” ஆகிய புத்தகங்களை வாசித்திருக்கிறேன். இந்த புத்தகங்கள் எனக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருந்ததோடு, தேவனுடனான என் உறவையும் ஆழமாக்கின. இப்போது, “அவருடைய சாயலுக்கு ஒப்பாக” மற்றும் ஆவியால் ஆளுகை செய்யப்படும் வாழ்க்கை” என்ற புத்தகங்களை வாசித்து கொண்டிருக்கிறேன். அவை உண்மையிலேயே அருமையாக இருக்கின்றன. நீங்கள் இந்த உலகத்திற்கு கிடைத்த பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறீர்கள்.

பி.எஸ்.,

தென் ஆப்பிரிக்கா

நான் உங்களுக்கு எழுதிய கடிதத்திற்கான உங்கள் பதிலை வாசித்தபோது, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காக நீங்கள் ஜெபித்த பின் எப்படி ஆவியானவர் என் வாழ்க்கையில் வல்லமையாக அசைவாடினார் என்பதை அவரே எனக்கு நினைவுறுத்தினார். நான் அவருடைய வல்லமையாலும், வழிநடத்தலாலும் நிறைந்திருக்கும்படியும், சவால்களை மேற்கொள்ள பலப்பட்டு, அவருக்காக அதிகமான ஆத்துமாக்களை ஆதாயம் பண்ண வேண்டுமென்றும் நீங்கள் ஜெபித்தீர்கள்.

சி.,

பிலிப்பைன்ஸ்

உங்கள் ஜெபங்களுக்கு மிக்க நன்றி. விஎல்சிசி-யில் பிரான்சைஸ் கையகப்படுத்தல் மற்றும் செயல்பாடுகளின் மேலாளராக எனக்கு ஒரு புதிய வேலை கிடைத்திருக்கிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு எல்லா மகிமை, கனம் மற்றும் துதியை செலுத்துகிறேன்.
ஆபாசப்பட அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகும்படி அநேகருடன் இணைந்து ஜெபித்திருக்கிறேன், ஆனால் யாராலும் எனக்கு உதவ முடியவில்லை – உங்கள் ஜெபம்தான் உதவியது. நீங்கள் இயேசுவிடம் ஜெபித்த ஜெபம் உண்மையாகவே என் வாழ்க்கையை மறுரூபமாக்கி இருக்கிறது. நீங்கள் ஜெபித்து ஒருசில வாரங்களுக்குள் நான் விடுதலை பெறத் தொடங்கியதை உணர்ந்தேன். இயேசுவுக்கு எந்த அளவுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தையால் விவரிக்க முடியாது. தேவனுக்கே துதி!

ஏ.எஸ்.,

ஜெர்மனி

உங்கள் சாட்சிகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள

இங்கே பதிவு செய்யவும்!